உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று முதல் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் துவக்கம்

இன்று முதல் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் துவக்கம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் இன்று (ஜூன் 18) முதல் துவங்குகிறது. இன்று மச்சூரிலும், நாளை நம்புதாளையிலும், 20ல் ஓரியூரிலும், 21ல் புதுப்பட்டினத்திலும், 24ல் திருவாடானையிலும், 25ல் தொண்டியிலும் நடக்கிறது. இந்த முகாம் ஊராட்சி அலுவலகங்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். முகாமிற்கு வருவோர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்கள் அறிய மருத்துவ காப்பீட்டு மாவட்ட திட்ட அலுவலர் அலைபேசி எண் 73730 04588ல் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி