உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிகளில் துாய்மை பணி துவக்கம்

பள்ளிகளில் துாய்மை பணி துவக்கம்

திருவாடானை : கல்வியாண்டு துவங்கவுள்ளதால் அரசுப் பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. ஊராட்சி துாய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2025---26ம் கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள், 18 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலை என 112 பள்ளிகள் உள்ளன. இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வியாண்டு துவங்க இருப்பதால் பள்ளிகளை சுத்தம் செய்ய கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை, பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளது. பள்ளி வளாகங்களில் வளர்ந்துள்ள முட்புதர்கள், செடிகளை வெட்டி அழிக்கவும், கழிப்பறைகளில் தண்ணீர் வசதிகளை முறைபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்தந்த ஊராட்சியில் வேலை செய்யும் துாய்மைப் பணியாளர்கள் வாயிலாக பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி வகுப்பறைகளில் அமைந்துள்ள மின் சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள், மின் பணியாளர்களைக் கொண்டு சரிபார்க்கப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை