மனிதநேய வார நிறைவு விழா
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய வாரம் நிறைவு விழா நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.ஜன.24 முதல் 30 வரை நடந்த மனிதநேய வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா, பரமக்குடி முருகேசன், சப்-கலெக்டர் அபிலஷா கவுர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி, டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன், தனி தாசில்தார்கள், விடுதி காப்பாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.