உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கட்டுமானப்பணி தாமதம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் ஓய்வு

கட்டுமானப்பணி தாமதம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் ஓய்வு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு பணி தாமதமாக நடப்பதால் பிளாட்பாரத்தில் பயணிகள் ஓய்வெடுக்கின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ரயில் மூலம் வந்திறங்குகின்றனர். இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனை ரூ.90 கோடியில் மறு சீரமைக்கும் பணி 2023ல் துவங்கியது. ஆனால் கட்டு மானப் பணிகள் தாமதமாக நடப்பதால் இன்னும் 6 மாதத்திற்கு பிறகே நிறைவு பெற வாய்ப்பு உள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பயணிகளுக்கு இலவச ஓய்வறை இல்லாததால் வெளியூர் பயணிகள் தனியார் விடுதியில் தங்க வசதின்றி ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே ராமேஸ்வரம் ஸ்டேஷனுக்கு வந்து பிளாட்பாரத்தில் ஓய்வெடுக்கின்றனர். இதனால் சென்னை, மதுரை, திருச்சியில் இருந்து தினமும் ராமேஸ்வரம் வந்திறங்கும் பயணங்களின் கூட்ட நெரிசலில், ஓய்வெடுக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மறுசீரமைப்பு பணியை விரைவாக முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை