உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் விழாவில் வடமாடு போட்டி

கோயில் விழாவில் வடமாடு போட்டி

கமுதி:கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோயில் வைகாசி பொங்கல் விழா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் 33 வது குருபூஜை விழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு விழா நடந்தது.போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு குத்து விளக்கு, பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புதுக்கோட்டை கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ