உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சி.ஆர்.எஸ்., சுட்டிக்காட்டிய பணிகள் சீரமைப்பு: ரயில்வே மேலாளர் பேட்டி

சி.ஆர்.எஸ்., சுட்டிக்காட்டிய பணிகள் சீரமைப்பு: ரயில்வே மேலாளர் பேட்டி

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சி.ஆர்.எஸ்., சுட்டிக் காட்டிய பணிகள் சீரமைக்கப்பட்டது என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா சிறப்பு ரயிலில் நேற்று ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். பின் டிராலியில் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு சென்றவர் புதிய துாக்கு பாலத்தை திறந்து மூடச் செய்தும், இரும்பு கர்டர்கள், தண்டவாளத்தை ஆய்வு செய்தார். பின் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம், கூரை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து விரைவாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அவர் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் (சி.ஆர்.எஸ்.,) சுட்டிக் காட்டிய பணிகள் சீரமைக்கப்பட்டன. விரைவில் பாம்பன் பாலம் திறப்பு விழா நடக்க உள்ளது. முன்னதாக பாலத்தை ரயில்வே அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ