உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூறாவளி மீனவர்களுக்கு தடை

சூறாவளி மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம் : வங்கக்கடலில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.வங்கக்கடலில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுவதால் கடலில் ராட்சத அலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் இன்று (ஜன.1) முதல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டதால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ