உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூறாவளி; ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

சூறாவளி; ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம்,: வங்கக்கடலில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதால் தமிழக கடலோரப் பகுதியில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது.இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை