சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ராமேஸ்வரம்: சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து கடந்து சில நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுகிறது. இதனால் ராமேஸ் வ ரம், பாம்பன், மண்டபம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகிறது. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் விபரீதம் ஏற்படக்கூடும் எனக் கருதி மீன்துறையினர் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து இன்று (செப்.,27) மீன்பிடிக்க அனுமதி டோக்கனை ரத்து செய்தனர். ஆனால் மீன்கள் விலை வீழ்ச்சியால் ராமேஸ்வரம், பாம்பனில் உள்ள 90 சத வீதம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.