உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கோபால்பூர், வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை இடையே கரை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இந்த தொலைதுார வானிலை எச்சரிக்கையால் நேற்று முன்தினம் இரவு பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இரு நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் பாம்பன் கடற்கரையில் நிறுத்தியுள்ள படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை