பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ராமேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் கரையை கடக்கும். சென்னை பகுதியில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் நேற்று காலை முதல் ராமேஸ் வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த தொலைதுார புயல் எச்சரிக்கையால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினர். இதன் மூலம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பாம்பன் கடற்கரையில் படகுகளை பாது காப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கவும் அறி வுறுத்தப்பட்டது.