மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 4ம் நாளாக 'ஸ்டிரைக்'
06-Oct-2024
ராமேஸ்வரம்: -இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரத்தில் 4 விசைப்படகுகளில் பொருத்திய அதிக குதிரை திறன் கொண்ட சீனா இன்ஜின்களை அகற்றவும்,இலங்கையில் சிறை தண்டனை பெற்ற 50க்கு மேலான மீனவர்களையும், சமீபத்தில் கைதான 16 மீனவர்கள் மற்றும் விடுபட்ட 20க்கு மேலான படகிற்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கிட கோரிநேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் மற்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.
06-Oct-2024