நவபாஷாணத்தில் கடல் நீர்மட்டம் உயர்வு நடைமேடை வழியாக பக்தர்கள் தரிசனம்
தேவிபட்டினம்: கடந்த சில நாட்களாக கடல் பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக, தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகம் கோயில் கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் நடைமேடை வழியாக சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும், பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் அதிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கடல் பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக, கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் நடைமேடை வழியாக நவக்கிரங்களை சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.