ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் தொடர் விடுமுறை எதிரொலி
ராமேஸ்வரம்:பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் நவராத்திரி விழா என தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர். அவர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடினர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதிகளவிலான பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.