உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: போக்குவரத்து நெரிசல்

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: போக்குவரத்து நெரிசல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நேற்று சனிக்கிழமை ஏராளமான வாகனத்தில் பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் வருகை, உள்ளூர் ஆட்டோக்களால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தை ஒருவழிப் பாதையாக போலீசார் மாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை