மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல்: வாலிபர் பலி
24-Mar-2025
திருவாடானை: திருவாடானை அருகே கே.கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 71. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு திருவாடானைக்கு சென்று வீட்டிற்கு தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு டூவீலரில் கிளியூரை நோக்கி சென்றார்.வாணியேந்தல் பஸ்ஸ்டாப் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் காயமடைந்தவர் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் சண்முகம் இறந்தார். திருவாடானை போலீசார் டிராக்டரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனை கைது செய்து டிராக்டர் உரிமையாளரை தேடிவருகின்றனர்.
24-Mar-2025