உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லஞ்ச  வழக்கில் கைது செய்யப்பட்ட மீன்வள ஆய்வாளர் சஸ்பெண்ட் 

லஞ்ச  வழக்கில் கைது செய்யப்பட்ட மீன்வள ஆய்வாளர் சஸ்பெண்ட் 

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் படகு உரிமம் பெற ரூ.1600 லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மீன்வள ஆய்வாளர் சகுபர் சாதிக் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராமநாதபுரம் மீன் வளத்துறை அலுவலக வடக்கு பகுதியில் மீன் வள ஆய்வாளராக பணிபுரிந்தவர் சகுபர் சாதிக் 49. இவரிடம் பனைக்குளத்தை சேர்ந்த மீனவர் படகுக்கு மீன் பிடி உரிமம் வழங்க விண்ணப்பம் செய்தார். அதற்கு ரூ.1600 லஞ்சமாக சகுபர் சாதிக் கேட்டுள்ளார். ரசாயனம் தடவிய ரூ.1600ஐ சகுபர் சாதிக்கிடம் மீனவர் தந்தபோது அதை வாங்கிய அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில் சோதனையிட்டதில் ரூ.39 லட்சத்து 80 ஆயிரத்து 300 கண்டறியப்பட்டது. விசாரணையில் மீன் வள கூட்டுறவு சங்கத்தின் பணம் என்பது தெரியவந்ததால் மீன் வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் சகுபர்சாதிக்கை சஸ்பெண்ட் செய்து மீன் வளத்துறை துணை இயக்குநர் உத்தரவிட்டார்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை