உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பட்டையில் அன்னதானம்

பட்டையில் அன்னதானம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை செல்லும் வழியில் பாப்பாத்தி காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆனி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் பாப்பாத்தி காளியம்மன், சுடலை மாடன் சாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு பனையோலை பட்டையில் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோயில் பூஜாரி முருகாண்டி செய்திருந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை