ஊராட்சிகளில் நாளை கிராம சபை
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் நாளை (ஜன.26) கிராம சபை கூட்டம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு ஊராட்சி அலுவலகங்கள் முன்பு கூட்டம் துவங்கும். அலுவலர்கள் பங்கேற்பார்கள்.கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.