உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை 18 வாலிபர்கள் தர்காவில் கந்துாரி விழா

கீழக்கரை 18 வாலிபர்கள் தர்காவில் கந்துாரி விழா

கீழக்கரை : கீழக்கரையில் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லா தர்காவில் 851ம் ஆண்டு கொடியேற்றம் கடந்த மே 28ல் நடந்தது.தொடர்ந்து உலக நன்மைக்கான மவுலீது எனும் புகழ்மாலை ஓதப்பட்டு உலக நன்மைக்கான கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. கந்துாரி விழாவை முன்னிட்டு அத்திக்கடை அபுபக்கர் பாபாவின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடந்தது.ஏராளமான பொதுமக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லா தர்கா விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை