குமரசுப்ரமணிய சுவாமி கோயில் பூக்குழி விழா கோலாகலம்
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்ததாக குமர சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2வது ஆண்டாக பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக காவடிகள் தரைப்பாலம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து மாலை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இரவு 8:00 மணிக்கு கோயில் முன்பு பூக்குழியில் இறங்கும் வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், தேவஸ்தான டிஸ்டிகள் செய்திருந்தனர்.