அரசு மருத்துவமனை காத்திருப்போர் அறையில் இருக்கையின்றி அவதி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கான காத்திருப்போர் அறையில் போதுமான இருக்கை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர். இந்நிலையில் இன்னும் மருத்துவமனை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக வார்டுகளில் தங்கிருக்கும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் வசதிக்காக காத்திருப்போர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பெயரளவில் இருக்கை வசதி உள்ளது. ஒரு சில காத்திருப்பு அறையில் இருக்கைகளே இல்லே. இதனால் மக்கள் தரையில் அமர்ந்து சிரமப்படுகின்றனர்.எனவே வார்டுகள் அருகேயுள்ள காத்திருப்போர் அறைகளில் போதுமான இருக்கை வசதிகளை செய்துதர மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.