திரவுபதி அம்மன் கோயில் விழா தினமும் மகாபாரதம் ஒளிபரப்பு
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 25 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் பல்வேறு மண்டக படிதாரர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகாபாரத நிகழ்வுகள் குறித்தும், திரவுபதியின் வாழ்க்கை வரலாறு குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில் கோயில் வளாகத்தில் பெரிய திரையில் தினமும் மாலையில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால், பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவயது இளைஞர்களும், மகாபாரத வரலாற்று நிகழ்வுகளை எளிதாக அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.