சுற்றுலா பயணிகளை கவரும் மங்களேஸ்வரி நகர் கடற்கரை; அடிப்படை வசதிகள் தேவை
கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் எழில்மிகு மன்னார் வளைகுடா கடற்கரை சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது. இங்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகத்திற்கு உட்பட்ட 6 கி.மீ., தொலைவிற்கு இக்கடற் கரையோரங்களில் 2001ம் ஆண்டில் நெருக்க மாக நடப்பட்ட சவுக்கு மரங்கள் இயற்கை அரணாக திகழ்கிறது. கடற்கரை ஓரப்பகுதிகளில் பசுமை போர்த்தியது போல ஓங்கி வளர்ந்து காணப்படும் சவுக்கு மரங்களின் வளர்ச்சியால் காற்று தடுப்பானாகவும் மணல்கள் அதிகளவு வெளியேறுவதை தடுப்பதற்கும் பயன்படுகிறது. மங்களேஸ்வரி நகரில் 50க்கும் அதிகமான நாட்டுப் படகுகள் உள்ளன. வெள்ளை மணல் சூழ்ந்த இப்பகுதியில் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கிணறு அமைத்துள்ளனர். 7 அடிக்கும் குறைவான ஆழத்தில் தோண்டப் பட்ட சிறிய கிணற்றில் தண்ணீர் எந்நேரமும் உள்ளது. அருகே கடல் இருந் தாலும் இப்பகுதியில் உள்ள கிணற்று நீர் சுவையாக உள்ளது. மங்களேஸ்வரி நகர் கடற்கரையில் இருந்து ஏழு நாட்டிகல் கடல் மைல் தொலைவில் புளுகுனி சல்லி தீவு அமைந்துள்ளது. துாய்மையான எழில் மிகு மங் களேஸ்வரி நகர் கடற் கரைக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது: இங்கு இரவு நேரங்களில் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்துள்ளது. எனவே இப்பகுதி யில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். தெரு விளக்குகள் முறையாக எரிய வேண்டும். இப்பகுதியில் உள்ள கிணற்று நீர் சுவையுடையதாக இருப்பதால் மக்கள் பயனடைவதற்கு குடிநீர் தொட்டி வசதி ஏற்படுத்த வேண்டும். சேதமடைந்த நிலையில் உள்ள மீன் உலர்த்தும் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என்றனர்.