பால்குட ஊர்வலம்
கடலாடி : -கடலாடி அருகே ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை முன்னிட்டு நடந்த மண்டல பூஜையில் மூலவர் முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. முன்னதாக விநாயகர் கோயிலில் இருந்து 108 பெண்கள், இளைஞர்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர். பின்னர் மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஒச்சத்தேவன் கோட்டை கிராம மக்கள் செய்தனர்.