உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்

அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்

திருப்புல்லாணி: பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சி நாகநாத சமுத்திரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.நாள்தோறும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்தது.மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.* ரகுநாதபுரம் அருகே நயினாமரைக்கான் ஊராட்சி சக்திபுரத்தில் முளைப்பாரி விழா நடந்தது. சக்திபுரத்தில் உள்ள பத்ரகாளி அம்மனுக்கு ஜூன் 29ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் ஆண்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம், கோலாட்டம் நடந்தது.நேற்று மூலவர்கள் சக்தி விநாயகர், பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் ஊருணியில் பாரியை கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை சக்திபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை