மேலும் செய்திகள்
நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
13-Dec-2024
பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து நடத்திய தேசிய நுகர்வோர் தின விழா கல்லுாரியில் நடந்தது. முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். நுகர்வோர் சங்க தலைவர் மாதவன், செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார்.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இளங்கோ பங்கேற்று பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முத்துசாமி, செந்தில்குமார் உணவு கலப்படம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் கீதா பேசினர். குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர் சத்தியபிரியா நன்றி கூறினார்.
13-Dec-2024