உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் நவராத்திரி விழா

கோயில்களில் நவராத்திரி விழா

திருவாடானை: திருவாடானை, திருவெற்றியூர் கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது.மக்களை துன்புறுத்திய மகிசாசூரன் என்ற அரக்கனுடன் ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு 10-வது நாள் வெற்றி கொண்ட சம்பவம் தான் நவராத்திரி விழாவாகக் கொண்டாடபடுகிறது. நவராத்திரி விழா நாட்களில் வீடுகள், கோயில்களில் பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.திருவாடானை சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று முதல் நவராத்திரி விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜையும் நடந்தது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், திருவிளக்கு பூஜை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ