உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவராத்திரி விழா: ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீ சக்கரம் பூஜை

நவராத்திரி விழா: ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீ சக்கரம் பூஜை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா அக்.2ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று கோயிலில் அம்மன் சன்னதி அருகில் கோயில் குருக்கள் கிரி ஜோஸி தலைமையில் ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம்செய்து மகா தீபாராதனை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து கோயிலில் இரவு 9:00 மணிக்கு நிறைநிலை திருமகள் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி