உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியூரில் நவராத்திரி உற்ஸவ விழா நாளை துவக்கம்

மாரியூரில் நவராத்திரி உற்ஸவ விழா நாளை துவக்கம்

சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூரில் பவள நிற வல்லியம்மன் சமேத பூவேந்திய நாதர் கோயில் உள்ளது. இங்கு நாளை (அக்.3) முதல் 12 வரை 10 நாட்கள் நவராத்திரி உற்ஸவ கொலு விழா ஒநடக்கிறது.கோயில் வளாகத்தில் பல்வேறு தெய்வங்கள் மற்றும் வன உயிரின கொலு பொம்மைகள் வைக்கப்பட உள்ளது. நாளை முதல் தொடர்ந்து மகேஸ்வரி தேவி, ராஜராஜேஸ்வரி, வராஹி அம்மன், மகாலட்சுமி, வைஷ்ணவி, கவுமாரி, சாம்பவி, நரசிம்மஹி, சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட அலங்காரங்கள் பத்து நாட்களும் நடக்க உள்ளது.அக்.12 மாலை 4.30 மணிக்கு அம்பு விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நவராத்திரி விழா ஏற்பாடுகளை பவளம் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை