உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டும், குழியுமாக மாறிய பாம்பன் பாலம்: பயணிகள் அவதி

குண்டும், குழியுமாக மாறிய பாம்பன் பாலம்: பயணிகள் அவதி

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சாலை சேதம்டைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988ல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இப்பாலத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி அலங்கோலமாய் கிடக்கிறது.இதில் பாலத்தில் உள்ள தார் சாலையில் பல இடத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இவ்வழியாக ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் ' தடதட ' என எழும் ஓசையில் பாலத்தில் ஏதேனும் விபரீதம் நடக்கிறதோ என பயணிகள் அச்சம் அடைகின்றனர்.இரவில் செல்லும் வாகனங்கள் இப்பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தின் சாலையை புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே பயணிகளுக்கு விபரீதம் ஏற்படுவதற்கு முன் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராஜா
ஜன 29, 2024 08:57

தமிழ்நாட்டில் எந்த மாநில நெடுஞ்சாலைகள் ஒழுங்காகவும், தரமாகவும் இருக்கிறது? அதற்க்கு பாம்பன் பாலம் மட்டும் விதிவிலக்கா என்ன?


அப்புசாமி
ஜன 29, 2024 08:23

எல்லாரும் பிரதமர் மாதிரி மதுரை வந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் போயிடுங்கோ..


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை