உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமம்

பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் பஸ் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துாரில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர், விருதுநகர், திருச்செந்துார், திருநெல்வேலி, சிதம்பரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள்இயக்கப்படுகிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ்சில் பயணிக்கின்றனர். பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் கால அட்டவணை எழுதப்பட்டுள்ளது. தற்போது ஏராளமான பஸ்கள் நேரம் மாற்றப்பட்டும் மற்றும் புதிய பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை பழைய கால அட்டவணை உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் வெளியூர் பயணிகள் அங்குள்ள கடைகளில் பஸ் நேரம் குறித்து கேட்டறிந்து பயணிக்கும் அவல நிலை உள்ளது.ஒருசில நேரங்களில் கடைக்காரர்கள் முகம் சுளிக்கின்றனர். இதனால் பஸ் நேரம் குறித்து தெரியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். புதிய பஸ் கால அட்டவணை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி