உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதிக்கு இரவு நேரத்தில் பஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு

கமுதிக்கு இரவு நேரத்தில் பஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இருந்து கமுதிக்கு இரவு 8:30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர்.கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ராமநாதபுரம், முதுகுளத்துார் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். மீண்டும் பணி முடிந்து திரும்பி செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து வரும் இரவில் பஸ்சில் முதுகுளத்துார் வருகின்றனர். இரவு 8:30 மணிக்கு முதுகுளத்துாரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு கடைசி பஸ் இயக்கப்படுகிறது. அதற்குப் பிறகு பஸ்கள் இல்லை. இதனால் இரவில் பணி முடிந்து வரும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கமுதிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். கமுதி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் இரவில் பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்லும் அவலநிலை உள்ளது. எனவே முதுகுளத்துாரில் இருந்து கமுதிக்கு இரவில் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை