மேலும் செய்திகள்
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
1 minutes ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
4 minutes ago
ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
4 minutes ago
டிச.26 ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
6 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் நான்காம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் டிச.,18 ல் சென்னையில் போராட்டம் நடத்தினர். செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிப்பது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது, கொரோனா காலத்தில் பணி செய்த அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது மாவட்ட அளவில் டிச.,19 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தனலெட்சுமி தலைமையில் 150 பேர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்களுக்கான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என செவிலியர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கு பல்வேறு மருத்துவ அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகிறது.
1 minutes ago
4 minutes ago
4 minutes ago
6 minutes ago