மேலும் செய்திகள்
நம்ம ஊரு புத்தகத் திருவிழா துவக்கம்
26-Jul-2025
பரமக்குடி பரமக்குடியில் மக்கள் நுாலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 3வது ஆண்டு புத்தகத் திருவிழாவை நடக்கிறது. ஆக.,3 வரை 10 நாட்கள் நடக்க உள்ள இந்த விழாவில், மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பங்கேற்று பேசியதாவது: புத்தகங்களை வாசிப்பதால் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அது எதிர்காலத்திற்கு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை தெரிந்துகொள்ள புத்தகம் வாசிப்பது அவசியம், என்றார். தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தினம் தோறும் கண்காட்சியை கண்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
26-Jul-2025