டூவீலர் விபத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் பலி
உத்தரகோசமங்கை : - ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 66. இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் காசாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். நேற்றிரவு 7:00 மணிக்கு உத்தரகோசமங்கை அருகே உள்ள களக்குடி கிராமத்தில் தனது மகளை பார்த்துவிட்டு மீண்டும் ராமநாதபுரம் செல்வதற்காக டூவீலரில் மேலச்சீத்தை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத லாரி பின்னால் மோதியதில் காயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்க இறந்தார். லாரி டிரைவரை உத்தரகோசமங்கை போலீசார் தேடுகின்றனர்.