உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ. 43.60 லட்சம் கஞ்சா; இலங்கையில் பறிமுதல்

ரூ. 43.60 லட்சம் கஞ்சா; இலங்கையில் பறிமுதல்

ராமேஸ்வரம் : இலங்கை மன்னார் கடற்படையினர் தமிழகத்தில் இருந்து படகு மூலம் கடத்தி வந்த ரூ. 43.60 லட்சம் மதிப்புள்ள 218 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இலங்கை மன்னார் கடற்கரையில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து சுற்றினர். அப்போது சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்படகில் இருந்த இலங்கை கடத்தல்காரர்கள் தப்பித்து ஓடினர். அதில் 218 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ. 43.60 லட்சம் ஆகும்.பறிமுதல் செய்த கஞ்சாவை இலங்கை பேசாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கஞ்சாவை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்குள்ள கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். இக்கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தமிழக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ