இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் கஞ்சா பறிமுதல்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 6 லட்சம் கஞ்சா மற்றும் ஒரு காரை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மண்டபம் தெற்கு அய்யனார் கோயில் கடற்கரையில் நின்ற சந்தேகத்திற்கிடமான காரை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதனுள் 28 பார்சல்களில் 56 கிலோ கஞ்சா இருந்தது. இந்த கஞ்சாவை தேனி அல்லது ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்து இங்கிருந்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டது தெரிந்தது. இதனையடுத்து மண்டபம் சுங்கத்துறையினர் ரூ.6 லட்சம் மதிப்பு கஞ்சா, காரை பறிமுதல் செய்து தலைமறைவானவர்களை தேடுகின்றனர்.