தேவிபட்டினம், தொண்டி கடலில் சஜாக் ரோந்து
தொண்டி: தொண்டி முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சஜாக் என்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீசார் சஜாக் என்ற கூட்டு ரோந்து பணியில் இரு நாட்களாக ஈடுபட்டனர். எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற கடலோரங்களில் ஆய்வு செய்தனர்.படகில் கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர். அந்நியர்கள், பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். மீனவர்களிடம் சந்தேகப்படும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் தெரிவித்தனர்.