வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பரமக்குடி வனத்துறையினருக்கு ஒரு வேண்டுகோள் இரண்டு நாட்களுக்கு முன் நான் குடும்பத்துடன் காரில் இராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் NH ரோட்டில் பரமக்குடியில் கண்மாயில் எண்ணிலடங்கா அயல்நாட்டுப் பறவைகள் வந்து கூடு கட்டி தங்கள் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டிக் கொண்டிருக்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தோம் அப்போது அங்கு பைக்கில் வந்த மூவர் அவர்கள் அக் கண்மாயில் ஏற்கனவே கட்டி வைத்திருந்த நைலான் வலையில் சிக்கிய மூன்று பறவைகளை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றதை கவனித்த நான் அவர்களிடம் சண்டையிட்டு அந்த பறவைகளை விடுவித்தேன். அதற்குள் என் மனைவி அவர்களின் பைக் எண்ணை படம் பிடிப்பதை பார்த்த அவர்கள் எங்களிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள் எனவே பரமக்குடியில் உள்ள ஹைவே ரோந்து போலீஸாரும் வனத்துறையும் இணைந்து அந்தப் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.