உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

 திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

கீழக்கரை: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் 'வடிவமைப்பு சிந்தனை' என்ற தலைப்பில் நடந்தது. முதல்வர் சுமையா தலைமை வகித்தார். சென்னை ஐ.சி.டி., அகாடமி மென்திறன் பயிற்சி யாளர் அருள்ஜோதி பங்கேற்று வடிவமைப்பு சிந்தனை எனும் தலைப்பில் பயிற்சிகள் வழங்கினார். மூன்று நாட்கள் நடந்த பயிற்சிக்கு பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லுாரி துணை முதல்வர்கள், பல்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவூத் கான் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !