ராமநாதபுரம் பங்குனி உத்திர விழாவில் சுவாமி வீதியுலா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பங்குனி உத்திர திருவிழாவில் வழிவிடுமுருகன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன், முருகன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.வழி விடுமுருகன் கோயிலில் 85 வது பங்குனி உத்திர திருவிழாவில் நேற்று முன் தினம் (ஏப்.,13) இரவு வள்ளி, தெய்வானையுடன், முருகன் அலங்காரத்தில் வீதியுலா நிகழச்சி நடந்தது. இந் நிகழ்ச்சியில் சிலம்பொலி சிலம்பப்பள்ளி சார்பில் ஒயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கருப்பு காளி, சிகப்பு காளி, முருகன், மீனாட்சி வேடமணிந்து பங்கேற்றனர். பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.