ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் நேற்று கடல் உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன. ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் நேற்று காலை 200 மீ.,க்கு கடல் உள்வாங்கியது. பாசி படர்ந்த தரை வெளியில் தெரிந்தது. நங்கூரமிட்டு கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டின. ஆங்காங்கே தேங்கி கிடந்த கடல்நீரில் மீன்குஞ்சுகள், கடல் சிப்பிகள் தத்தளித்தன. மதியம் 2:00 மணிக்கு மேல் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. தென்மேற்கு பருவக்காற்று வீசும் சீசனில் இப்பகுதியில் கடல் உள்வாங்குவதும், சில மணி நேரத்திற்கு பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீ னவர்கள் தெரிவித்தனர்.