உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி பூஜை

உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமி பூஜை

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. முன்னோர்கள் மற்றும் பித்ருக்களால் ஏற்பட்ட சாபங்கள் நிவர்த்தி பெற வேண்டியும் வராகி அம்மனுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வழிபாடு செய்கின்றனர். நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை