உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை நகராட்சியில் மூன்று மாதத்தில் மூன்று கமிஷனர்கள்

கீழக்கரை நகராட்சியில் மூன்று மாதத்தில் மூன்று கமிஷனர்கள்

கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.கீழக்கரை நகராட்சியில் புதிய கமிஷனராக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் 57, பொறுப்பேற்றார். அதன் பிறகு மானாமதுரை கமிஷனராக இடம் மாறுதலாகி சென்றார். மானாமதுரையில் இருந்த ரெங்கநாயகி அக்.3ல் பொறுப்பேற்றார்.இந்நிலையில் அவரும் தொடர் விடுமுறையில் வெளியூர் சென்று விட்டார். இதனால் கீழக்கரை நகராட்சி அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு பணிகளில் சுணக்கம் காணப்பட்டது. நேற்று கீழக்கரை நகராட்சி பொறியாளராக இருந்த அருள் கூடுதல் பொறுப்பாக கமிஷனராக பொறுப்பேற்றார். நகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்ற அவருக்கு நகராட்சி தலைவர் செகனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான், மற்றும் அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை