உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள்  வழக்கு விசாரணை அக்.28க்கு தள்ளி வைப்பு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள்  வழக்கு விசாரணை அக்.28க்கு தள்ளி வைப்பு

ராமநாதபுரம்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ராணுவ ரகசிங்களை திருட உதவியாக இருந்த இலங்கை, மலேசியாவை சேர்ந்தவர்கள் மீதான வழக்கு அக்.,28க்கு தள்ளி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் மேற்கு தெருவை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52. இவரது அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல் ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அவர்கள் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கி யிருந்தனர். சித்தி சுலைஹா தனது ரேஷன் கார்டில் முகமது யாசீர் தம்பி என்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் என அதிகாரி களிடம் பொய்யான தகவல்களை தெரிவித்து சேர்த்துள்ளார். அதை வைத்து ஆதார் கார்டு, இரண்டு சிம் கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவருக்கு கொடுத்துள்ளார். அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி இந்திய ராணுவ அதிகாரிகளின் அலைபேசியில் இருந்து மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார். அலைபேசிகளை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை அழித்துள்ளனர். கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார். மற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை அக்.,28க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை