உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவமனைக்கு இரு குளிர்சாதன பெட்டி

அரசு மருத்துவமனைக்கு இரு குளிர்சாதன பெட்டி

திருவாடானை : திருவாடானை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு ரூ.4 லட்சம் செலவில் ௨ குளிர் சாதன பெட்டிகள் ராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை உள்ளது. விபத்து, தற்கொலையால் இறந்தவர்களின் உடலை கொண்டு வரும் போது குளிர் சாதன பெட்டி இல்லாததால் உடல் பாதுகாக்கப்படாமல் இருந்தது. ராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ.4 லட்சம் செலவில் இரண்டு குளிர் சாதன பெட்டிகள் நேற்று வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. டாக்டர் ஜெகநாதன் வரவேற்றார். ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் மீரான்கான் சலீம், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரகலநாதன், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, ரோட்டரி கிளப் உதவி கவர்னர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் முகிலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி