உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் மீனவர்களை மீட்க வலியுறுத்தல்

பாம்பன் மீனவர்களை மீட்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: பாம்பனை சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை யில் நடுக்கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 பேர், விசைப் படகை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் என மீனவர் குடும்பத்தினர் வலியுறுத்தினர். பாம்பன் தெற்கு வாடியை சேர்ந்த மீனவர் குடும்பத்தினர்கள் ராமநாத புரம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பாம்பனை சேர்ந்த மீனவர்கள் ஆக.,5ல் உரிய அனுமதி சீட்டு வாங்கி கடலுக்கு விசைப்படகில் சென்றனர். அப்போது படகு பழுதாகி இந்திய எல்லைக்குள் நின்றுவிட்டது. அங்கு வந்த இலங்கை கடலோர காவல் படையினர் எல்லை தாண்டியதாக கூறி 10 மீனவர்களை கைது செய்தனர். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் விசைப்படகு மற்றும் 10 மீனவர்களை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ