வராஹி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராஹி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் தங்கக் கவச அலங்கார பூஜைகள் நடந்தது. மூலவர் வராஹி அம்மன் மற்றும் மங்கை மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. வராகி அம்மனுக்கு பட்டு சாற்றி தங்க கவச அலங்காரத்தில் பஞ்சமுக தீபாராதனையில் சுவாமி தரிசனம் செய்தனர்.அன்னாசி பழம், கிழங்கு வகைகள், பழங்கள் உள்ளிட்டவைகளை பக்தர்கள் நெய்வேத்தியமாக படைத்தனர். ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சளை உருண்டையாக அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.