உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடியிருப்பு அருகே கழிவு நீர்

குடியிருப்பு அருகே கழிவு நீர்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி 12 வார்டுக்கு உட்பட்ட மறவர் தெரு, காவல்காரன் சந்து, கடலாடி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்காக ரோட்டோரத்தில் கால்வாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் செல்கிறது.குறிப்பிட்ட தெருக்களுக்கு பிறகு கால்வாய் வசதி இல்லை. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு அருகே குளம் போல் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.தேங்கியிருக்கும் கழிவு நீரால் தகர செட் விழுந்துள்ளது. குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ